Home இலங்கை பாலியல் இலஞ்சம் கேட்ட கிராமசேவகர் கைது.

பாலியல் இலஞ்சம் கேட்ட கிராமசேவகர் கைது.

by admin

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று செவ்வாய்க் கிழமை(29) இரவு சிலாபத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,
 முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் குறித்த கிராம சேவகர்  பிரதேச செயலகத்தில் நாளைய தினம்  மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஸ்ரப்படுத்த கூடாது என்பதற்காக தான் வீட்டிலேயே கொண்டுவது தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.


குறித்த விடயத்தை குறித்த பெண் உடனடியாக முசலி காவல்துறையினருக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும்  காவசல்துறையில்  முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிலாவத்துறை காவல்துறையினரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் #பாலியல்இலஞ்சம் #முத்தரிப்புதுறை #கிராமசேவகர் #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More